
குருதிப்பெருவழியே வந்த என்னின்
பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த
முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை
விட இனிது.
என் சிரிப்பில், முறைப்பில், களிப்பில் உன்னவனை
தேடிக்கண்டபின் காதலனாக்குவாய் - குறும்பில்
அழுகையில், பிடிவாதத்தில் உன் பிள்ளை கண்டு
மகிழ்வாய்,தூங்கும் வசத்தில் ,இடதுகை பழக்கத்தில்
உந்தை கண்டு சேயாவாய்.
முகம்பார்க்கும் ஆவலுக்கு ரசம் போன கண்ணாடி
தடையில்லை என நீ என்னுள் உன் உறவுகளை - தேடித்
தேடி கண்டெடுத்தாய். உன் காதலானாய்
தந்தையாய், மகனாய் உன் முந்தானை பிடித்தலைந்த
இந்தப் பேரனை விட்டு ஏன் கிழவி? செத்துப்போனாய்..........
- நா.செந்தில்
அம்மாச்சி
- விவரங்கள்
- நா.செந்தில்
- பிரிவு: கவிதைகள்
More articles by நா.செந்தில்
- கூடினோம் கலைந்தோம் (25 ஏப் 2010)
- எதிரலை (25 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.