Loveகடுவன் குரங்கொன்று
மூன்றாவது மரத்திலிருக்கும்
தம் காதல் மந்தியை
நெருங்க –
அடுத்தடுத்த மரத்திற்குத்
தாவிய வேளையில்
குலுங்கிய
மரக்கிளைகளிலிருந்து
உதிர்ந்திருக்குமோ
முதல்
காதல் கவிதை?


நீ
கண்களுக்கு
மை தீட்டும்
பென்சிலைக் கூர்தீட்டி
ஒரு கவிதை எழுதினேன்.
உன்
ஓரப்பார்வை
போலிருந்தது
அக்கவிதை

பூங்காற்று தனசேகர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.