என்னுள்
உதிர வோட்டமாய்
கண்ணிற்கு காட்சியாய்
நீ என் நெஞ்சில்
பாறையில் பூவாய் பூத்தாய்.

உயிர் நிலவே
உறக்கத்தை உருக்குலைத்தாய்

கனவில் நிஜமாய் வந்து
கண்ணீல் படாமல் மறைகின்றாய்

கருங்கூந்தல் மேகங்களால்
காதல் மழை பொழிகிறாய்

நடையில் நட்டியம் காட்டிடும்
அன்னத்தின் உறவினராய்

சிரிப்பில் இசையை முழக்கிடும்
வண்டுகளின் ரீங்காரமாய்

சிந்தையில் என்றும் தங்கிடும்
என்னவளாய்

என் சுவாசக் கற்றாய்
என் இதய நிலவாய்...நீ


சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by சு.சா.அரவிந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.