
உடலுக்குள்ளேயே உடலைத் தின்று
வளரும் மனம் எனது பாடலின் தூரங்களையும்
அர்த்தங்களையும் அறிந்திருந்தது
ரகசியமாய் நான் வரைந்துவைத்திருந்த
நிர்வாண ஓவியங்களையெல்லாம்
அரித்துத் தின்றுபெருத்தது
காலை முதல் நிலவு திரும்பும் வரையிலான
என் புல்லறுக்கும் அசைவுகளில்
ஒடுங்கி உறங்கியது
உடலைச் கிளைகளாக்கிப் பறவைகள் வந்தமரச்
சிலிர்த்து நெளிந்தது
இன்னுமொரு பாடலுக்காய்த்
திரைகளை அவிழ்க்கும்போது
என் இதயத்திலிருந்து வெளியேறுவேன்
காளான்கள் பூக்கும் மழைஇரவில்
என் தந்தையின் விதைகள் வீழ்ந்த
நிலத்தைக் கண்டடைந்து
ஒரு மரமாய் முளைத்தெழுவேன்
அழுகத் தொடங்கியிருக்கும் என்னுடலில்
துடிதுடித்து அழும் அப்புழு
- குட்டி ரேவதி
நெளியும் பிரதி
- விவரங்கள்
- குட்டி ரேவதி
- பிரிவு: கவிதைகள்
More articles by குட்டி ரேவதி
- பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி (28 செப் 2011)
- ஒரு வார்த்தை சொல்லேன்! (26 செப் 2011)
- உடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பிரதியாக) (21 பிப் 2011)
- நம் காலத்துக் கேள்வி (20 மே 2010)
- வனதேவதை (07 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.