Kanyakumariவிரிந்த கரையின் தனிமையில்
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
விடியலில் வந்தவள்
இன்னமும் திரும்பவில்லை

காலையிலேயே வாதம் தொடங்கிவிட்டது
எதையோ இவள் கேட்பதும்
அவள் மறுப்பதுமாக

சிறுபிள்ளையின் ஆசைக்குச் சிறிது
அக்கறை காட்டியிருக்கலாம் அவள்
இவ்வளவு பெரியவளால்
கொஞ்சமாவது உதவமுடியாதா என்ன

நீலம் பச்சை வெளுப்பு
எத்தனை முகம் காட்டினாலும்
இவள் விடுவதாக இல்லை கோரிக்கையை
பின்பு சிவக்க

எட்டி இடதுகையால் மறுவிளிம்பைப்
பிடித்து இழுத்து
வலதுகையால் ஆரஞ்சு மிட்டாயை எடுத்து
வாயில் திணித்துக்கொண்டு திரும்புகிறாள்
உதட்டிலிருந்து ஒளிச்சாறு வழிய

சிறுமியிடம் தோற்ற சோகத்துடன்
முக்கடலும் முகம் கறுத்துக் கிடக்கிறது

மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It