கண்முன்னே நீ நின்றாய்…
என்
கண்களின் உள்ளே கலவரம்!
செவ்வாய்மொழிகள் நீ சொன்னாய்…
என்
செவிகளின் இடையே பிரளயம்!
காதலை நீ சொல்லியதும்
என்
இதயம் ஆனது போர்க்களம்!
தீவிரவாதியடி நீ…
எத்தனை கொடுமைகள்
நிகழ்த்திவிட்டாய் என்னில்…!
- இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)