Poor familyவயற்காட்டில் இறங்கி
நாற்று நட்டு
வரப்பு வெட்டி
களை பறித்து
நாளெல்லாம் கஷ்டப்பட்டு
வாங்கிய கூலியில்
உலையில் போட
அரிசி பருப்பும்
மிச்ச பணத்தில்
பையனுக்கு ஒரு
சொக்காயும் வாங்கிவர
மகிழ்ச்சித் துள்ளலில்
தந்தையைக் கட்டிக்கொண்ட
மகனுடன் அனைவரும்
சாப்பிட அமர்கையில்.....
திடுக்கிட்டு விழித்தாள்
குடிகாரக் கணவனின்
'கதவத் தொறடி' சத்தத்தில்!

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.