Indian Farmerஎந்தபுள்ளைக
ஆண்டவன பாத்துச்சி
அப்பனாத்தாள தவிர

அள்ளி அள்ளி
கொடுத்ததுக்கே
ஆயுசுபூரா
கடனாளியாயிட்டோம்

களச்சிபோயிவர
ஆத்தாவுக்கு காலமுக்கவும்
ஒழச்சிவர அப்பனுக்கு
ஒடலமுக்கவும்
முடியல

புலம்பெயர்ந்தப்பவே
புடிச்சிபோச்சி
இந்த தரித்திரம்

அடுத்த சென்மத்திலாவது
ஆடு,மாடுகளா பொறந்து
அசந்து தூங்கறவுக கூட
அசப்போட்டுகிட்டே பேசணும்

கவிமதி, துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.