Sad manமனைவியே !
முன்னதாக நீ சென்றால்
உடனே
எனை அழைத்திடுவாய் 
என்றாயே ?

பத்து வருடமாச்சே !
நான் உயிருடன் சாகிறேன்
நீ இல்லாமல்.

உனது பிரிவில் உனதருமை
உருக்கமாய் உணர்ந்துவிட்டேன்
பூமியில் மரித்து
உன்னுடன் ஜனனமாகத் 
துடிக்கிறேன்

கணவன் இழந்த மனைவியின்
கண்ணீர் வாழ்க்கையில்
ஒரே ஒரு மரணம் - ஆனால்

மனைவி இழந்த 
நல்ல கணவணுக்கோ
கண்ணீர் மறைத்த வாழ்க்கையில்
ஒவ்வொரு நொடியும் மரணம்

செடிகளிடமும் பூக்களிடமும்
உறங்கின கட்டிலிடமும்
எனக்கு பதில் சொல்ல முடியவில்லை

பத்து வருட தோல்வியின்
தகுதியோடு கேட்கிறேன்
எனை உடனடி எடுத்துக்கொள்

உனை நான் கண்டதும் 
கேட்பது முத்தமல்ல....
உனது
காலில் விழுந்து மன்னிப்பு !


சுரேஷ், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It