கண்ணீரைக்
கண்ணீரால் சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு
நீ என்னை
நானாக்கியபோது
என் சிறகுகளின் சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்

பின்னொரு நாளில்
ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும் கலையை
நானே அறிந்திருப்பது
அவசியமென்று
அறிந்துகொண்டேன்

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It