தலைக்கு மேல்
விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.

இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.

யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.

ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.

அப்போதும்
சத்தம் போட்டது பல்லி. 

சேவியர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It