விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.
இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.
யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.
ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.
அப்போதும்
சத்தம் போட்டது பல்லி.
- சேவியர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.