India Childஎத்தனை நாளைக்குத்தான்
தெரியவில்லை

கடனைத் திருப்பாததால்
ஒன்றிரண்டு நட்பும் போயிற்று

அடிபட்டுப் படுக்கையிலிருக்கும் நெருங்கியவர்களைப்
போய்ப்பார்க்க வக்கில்லை

பரிசுதர இயலாதென்பதால்
திருமணங்கள் தவிர்க்கப்பட்டன

சொந்தமென்று யாரும் வந்தால்
அக்கம்பக்கம் அலைச்சல்

சம்பளம் பிந்தினால்
அழுகினதாய்த் தேடுகிறான்
கடைக்காரன்

வெளுத்துப்போன புடவையில்
மனைவி

ஊக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்
செருப்பு

மின்கட்டணம் அஞ்சி
விசிறியில் கழியும் கோடை

இவை எவற்றையும் சட்டைசெய்யாமல்
நம்பிப்
பிறந்திருக்கிறாள் மகள்


பச்சியப்பன்
Pin It