என் வீடு
என் வீட்டறைகள்
எனக்கே உரித்தான
அறைகளெல்லாம்
எனக்கான சுதந்தரத்துடன்
இல்லை.

ஜன்னல்களை
விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை

காற்று
விழுந்தென்னைப் புணர்வது
தடுக்கப்பட்டுவிட்டது

ஆகாய வைரங்களைக் காணாமல்
கரையும்பொழுதுகளால்
கனக்கிறது மனம்

என் சுதந்தரவெளி
யாருடைய எல்லைக்குள்ளோ
இருப்பது அறிந்து
அமைதியிழக்கிறது அந்தரங்கம்

நான்குபுறமும்
முளைத்துக்கொண்டே உயரும்
கழுகுகள்
என் சூரியனையும்
சந்திரனையும்
பறித்துக்கொண்டன

நான்
என் சுதந்தரம்
எப்படி சுதந்தரமாக?


பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It