Manநிலா காயும் முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!

தாகம்!
தாகம்!

முளையாய்
அரும்ப முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!

தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!

ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!

ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சை
மூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒரு
தாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!

வானம்
தொட்டு விடத்
துடிக்கும் உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!
br> 
சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.