நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும் வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள் நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

- சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It