More articles by த.சரீஷ்
- பயணம் (25 ஏப் 2010)
- நாளை உன் வருகைக்காக... (25 ஏப் 2010)
- சிறைச்சாலை (24 ஏப் 2010)
- திறக்கப்பட்ட கதவுகளின் வழியே.. (24 ஏப் 2010)
- கொலைக்கூத்து (24 ஏப் 2010)
தினம் தினம்
ஒரு பாடலேனும்
பாடநினைத்து...
இயலாமல்போன
என் கனவுகள் கால்முளைத்து
எங்கேயோ வேகமாக
ஓடிக்கொண்டிருக்கிறது...!
மெல்ல மெல்ல
உணர்வின் வழிவந்த
எதையோ ஒன்றை
எழுதத்துடித்து தோற்றுப்போன
என் எழுதுகோல்
கண்களை அகலத்திறந்து
எதையோ...
வெறித்தனமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறது...!
மீண்டும் மீண்டும்
நீந்திவரும் நினைவுகள்
என்னுள்ளே....
உரச உரச உண்டாகும்
இதமான சுமையை
சுமக்கமுடியாதுபோன
என் மனசு
தனக்குள்ளேயே...
பேய்த்தனமாய்
பேசிக்கொண்டிருக்கிறது...!
மனச்சிறைக் கம்பிகளை
உடைத்து
சுவடுகள் தேடி ஓடிய
என் சுவாசக்காற்று
ஏனோ தெரியவில்லை
திரும்பிவந்து...
இதயக்குகைக்குள்
செத்துக்கிடக்கிறது...!
இருப்பினும்...
இந்த இருட்டில்
யாரங்கே.....
என் மனவானத்து
பலகோடி நிலவுகளுக்கு
ஒவ்வொன்றாக ஒளிகொடுப்பது...?
அது....
ஒரு நாள்
ஒரு இராகம்
ஒரு கவிதை...!
மறுபடி மறுபடி
அலைபாயும்
உயிருள்ள உணர்வாக
அவள்.... நான்...!!!
- த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )