மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் ஆனாலும்
மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளிப்பட்ட காயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர்தந்தவன் மட்டுமல்ல
உழைத்து உண்பவன்
நல்லவன் அவன் என்பதாலும்

“பகவானே அப்ப நான்?”

நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.