வானில் தொங்கும் மேகங்கள்
அந்தரவெளியில் அசைய
எழுத அமர்வேன்.

ஜன்னல் கதவைக் காற்று வந்து தட்ட
அதைத் திறக்கும் முன்
காகிதங்களை ஒழுங்கு செய்வேன்

யானையளவு மழை வந்து
ஜன்னலை அடைத்துக்கொள்ள
ஏதும் எழுதாமல்
மழை எப்படிப் பறவைகளை வருத்தும்
எனக் குமைவேன்

ஓர் ஓவியத்தின் காலடி
காகிதத்தில் பதிந்ததும்
எழுதியது போதுமென எழுவேன் 

குட்டி ரேவதி
Pin It