சற்றுமுன் வரைந்த ஒவியத்தில்
புதிதாய்...
பூத்திருந்தது ஒரு மலர்.!
ஆசையாய் பரித்தேன்!
அடடா...!
பட்டாம்பூச்சி..!


***

மேகங்களின் கால்களில்
தீக்காயம்!
பாவம்.
சூரியனை மிதித்துவிட்டதாம்.


***

பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொள்ளுமாம்..!
பற்றவில்லையே..!
சூரியனும் மேகமும்.?


***

மழையில்..
நனைந்து வந்த குடை
திண்ணையில்.!
உள்ளே போனவர்கள்
தலை துவட்டிக் கொள்கிறார்கள்.!
**

தியாகுஆசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.