angry_ladyஎனது பதினான்காம் வயதில்
நிகழ்ந்தது
முதல் பாலியல் பலாத்காரம்!

அப்பாவின் உயிருக்கு உணவாய்..
மாத்திரை கொடுக்க..
கடைக்கு அனுப்பினாள் அம்மா!

போகும் வழியில் இருபசங்கள்
அடித்த கமெண்ட் "செமகுட்டிடா"

மேலாடையோடு
முதன்முதலாய்
மனம் கற்பழிப்பழிக்கப்பட்டது!

விரலால் தீண்டி
விரகதாபம் தீர்த்தது
பயணச்சசீட்டு தரும் சாக்கில்
ஒரு ஜந்து..!

ஒரு உரசலில் தாம்பத்தியத்தை
உணரவைத்தது
சகபிரயாண மிருகம்!

சின்ன பருவத்தில்
வாங்காத அடியேல்லாம்.
இடியாக விழுந்தது
உடலில்...

என் முதலிரவில்
"அசதிய இருக்கு
நாளை வச்சிக்கலாம்"
என்ற கோரிக்கை கிழிக்கப்பட்டு
முதன்முதலில்
மனதோடு சேர்த்து
உடலும் கற்பழிக்கப்பட்டது!

வயதான அம்மாவை
காண
கைக் குழந்தையோடு
பிறந்த வீடு நுழைந்தேன்.

மாத்திரை கேட்டாள்
வாங்க போனேன்
போகும் வழியில் இருபசங்கள்
அடித்த கமெண்ட் "செமகட்டைடா"

ஒரு செமகுட்டி
செமகட்டை-யான
பெருமிகு வரலாறு இது!

ஏய் ஆண்களே..!
எனது இடது மார்பை
திருகி எரிந்தால்
மதுரை என்ன....?
இனி ஒரு மெழுகுவர்த்தி கூட எரியாது.! 

தியாகுஆசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It