வாசமில்லாத ஒரே காரணத்திற்காக

More articles by ரிஷி சேது

சூடாமலே விட்டுப்போன வாடா மல்லி நான்

சாவி கொடுக்க ஆளின்றி ஓடாது நின்றுபோன
ஆனால் பழுதுபடாத கடிகாரம் நான்

உப்பாய் போன காரணத்திற்காக யாரும்
குடிக்காமல் விட்டுப்போன அலைகடல் நீர் நான்

வரதட்சணை கொடுக்கமுடியாமல்
திருமண சந்தையில் சீண்டாது விட்டுப்போன
முதிர்கன்னி நான்

கண்டுபிடிக்க ஏதுமில்லாததால்
கண்டுகொள்ளாமல் விட்டுப்போன
விஞ்ஞானி நான்

மொத்ததில் நானொரு மன நோயாளி...

ரிஷி சேது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.