பொலபொலவென விடியும்
மடல்களின் காலைவேளை

Morningஏக்கங்களின் சமுத்திரம்
சாம்பல் வழிய விரிந்தது வானமாய்

‘என் வேட்கைப்பேராற்றின்
சில கணச்சரிவில் வெடித்துச் சிதறும்
சிறு குமிழி
உன் ஆணவம்’ என்றாள்
பனிநீரில் நின்றவாறு
சாதகத்திற்கு வந்தவள் முன்
குளிர் விறைத்து நின்றது

குட்டி ரேவதி

Pin It