Ladyகன்னியவளின் கன்னத்திலென்
கன்னம் வைத்துக் காதில்
கவிதை சொன்னேன்

கள்வர் வருவார் கவனமடி
காவல் காக்கப் போகும் வேளை
கரும்பாதச் சத்தங்கள் உன்
காதுகளுக்குள் இனிமையான
கானங்களாக நடனமிடும்
கண்டுகொள்ளாதே...

காதலால் வசப்பட்ட என்னைக்
கள்வர்கள் திருடிய போதும்
எந்தன்
கனத்த இதயத்தின் அலறல்கள்
கண்மணி உன் செவிகளில்
கதைபேசும்…அப்போது
கண்டுகொள் என்னை மட்டும்..

கனவுகளாய் இருந்த காலங்களில்
கள்ளச் சிரிப்புடன் உலாவும்
அந்தக் காக்கைக் கூட்டம்
உன்னையும்
கட்டாயமாகக் களவாடிக்கொள்ளும்..

கண்மணியே அதுவரை காத்திராது
களமிறங்கிக்கொள்… உன்
காதலிதயத்தில் எந்தன்
தாகத்தையும் கவனமாகத்
தைத்துவவைத்துக்கொள்…
களமிறங்கி என்னைக் களவாடிய
அந்தக் கள்வரின் கைகளைத்
துண்டாக்கிக்கொள்...

ஆல்பர்ட் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.