treeஒவ்வொருமுறையும்
தொலை பேசுமுன்
மனம் பதறும்
அம்மா அப்பா
சுற்றெமெல்லாம்
சுகமாயிருந்து
hello
சொல்லவேண்டுமென்று...


போனமுறை
பேச முடியாதவைகளையும்
பேசமுடியாதவர்கள் கூடவும்
பேசியே தீரவேண்டும் இம்முறை
என்றெண்ணி
பேசும் ஒவ்வொரு முறையும்
‘ம்’ மட்டுமே
ஒலித்து முடியும் என்
ஒலியழைப்புகள்...


போனமுறை பேசியபோது
பாக்கியக் கிழவி
செத்துப் போனதை
அப்பா சொல்லாமலே விட்டிருக்கலாம்
கூன் முதுகும்
பனம்பழ வாசமுமாய்
வந்துபோகிறது
அவளின்
நினைவுகள்


நீலமும் மஞ்சளுமாய்
பூக்கூட்டம் - நீள்
பச்சைப் புல்வெளி
கொஞ்சிக் குலாவும் பறவைகள்
இன்னம் சில
பெயரறியா மிருகங்களுமுண்டு இங்கே
ஆயினும்
மனம் பொறுக்கும் இங்கில்லா
மரமல்லியையும்
வேப்பம்பூக்களையும்....

ரிஷி சேது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by ரிஷி சேது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.