Linesவளைத்து எழுதப்
பழகும் வரை
இழுத்து வந்தவை
கிறுக்கல்கள்

வளைத்து நெளித்து
புள்ளி வைத்து
போடும் போது
கோலங்கள்

அறியப்படும்
கணிதத்தில்
ஆரமென்றும்
விட்டமென்றும்

எழுதியது
தவறென்று
இழுக்கும் போது
அடித்தல்கள்

முதுமை வந்து
முகத்தில்
எழுதும் போது
சுருக்கங்கள்

வாங்கிய
அடிகளின்
ஞாபக நீட்சியாய்
தழும்புகள்

கோடுகள்
எப்போதும்
அறியப்படுவதில்லை
கோடுகளாக மட்டும் 

க.ஆனந்த் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It