அடிக்கடி
செல்லமாய்
நீ என்
தலையில் கொட்டுவதை
நினைவு படுத்தியது.......
சற்று முன்
பெய்த
ஆலங்கட்டி மழை.

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டே போகிறது
ஆனால்
உனக்கு மட்டும்தான்
அழகு கூடிக்கொண்டேபோகிறது.

உனக்குப் பின்னால் ஒளிவட்டம்
எதுவும் தோன்றவில்லை
கையில் ஆயுதங்களும்
எதுவும் இல்லை
ஆபரணங்களின் ஆதிக்கமும்
உன் திருமேனியில் இல்லை
எனினும்
நீ
என் காதலின் கடவுள்

நிறைய பேசுவேன்....
உன்
அருகில் மட்டும்
ஊமையாகிப்போகும்
நான்.

மறுபடியும்
எங்களுர்
விழாக்கால
இரவுகளை நினைவுபடுத்துகிறது
உன் புன்னகை.

என்
அருகிலேயே
நீ இருக்கிறாய்...........
ஏழு கடலையும்
ஏழு மலையையும்
தாண்டி
சொர்க்கம் இருப்பதாய்
தவறாய் கதை சொன்ன
தமிழ் ஐயாவை
என்ன செய்வது.

அந்த
பார்வையற்ற
தொழுநோயாளியின்
கரம் பிடித்து
சாலையைக் கடக்க
நீ உதவியபொழுதுதான்
என் சந்தேகம்
உண்மையானது.........
நான் காதலிப்பது தேவதையைத்தான்.

வசிகரிக்கும் வார்த்தைகள்
கவர்திழுக்கும் கற்பனைகள்
பாரட்டி உயர்த்தும் பொய்கள்
இவை எதுவும்
என் கவிதைகளில் இல்லை
உன்மேல் கொண்ட
உண்மை காதலைத்தவிர............

என்
மரணத்திற்குப் பிறகும்
உன்னையே
சுற்றிக்கொண்டிருக்கும்
என் ஆன்மா
என்னைப்போலவே........

வே.மணிகண்டன்;
முனைவர்பட்டஆய்வாளர்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
புதுவைப்பல்கலைகழகம்
அலைப்பேசி:9786853956
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It