காதலில் திளைத்த தருணங்களில்
More articles by ப.கவிதா குமார்
- தெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன் (02 ஜன 2018)
- இயக்குநர் பாலா படங்களில் போலீஸ் (15 டிச 2017)
- என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்? (12 டிச 2017)
- மறக்கப்பட்ட புரட்சிதாசன் (29 நவ 2017)
- சிவகங்கை சீமையில் தொடரும் தீண்டாமை - உண்மை அறியும் குழுவிடம் கதறிய தலித் மக்கள் (09 பிப் 2015)
முத்தங்களுடன்
ஆசையாய் வாங்கித்தந்த
பூக்களின் எண்ணிக்கையில்
எத்தனை டேலியா
எனத் தெரியவில்லை.
மல்லிகை,கனகாம்பரம், முல்லை,
ரோஜா என மலர்களை
அள்ளிவரும் பூக்காரியின் கூடையில்
எப்போதும் சிரிக்கும்
டேலியாபூக்களைக் காணவில்லை.
ஹோட்டல்கள்,விமானநிலையங்கள்
வரவேற்பறைகளை
நிறைக்கச் சென்றுவிட்டதாக
அர்த்தம் கூறினாள்.
என்னிடம் டேலியாபூ
வாங்கிக்கொண்ட காதலி
இன்னொருத்தனின்
மனைவியாகிப் போனாள்.
டேலியா பூக்களற்ற வீதியில்
அவள் இப்போது வருவதேயில்லை.
என்கவிதையைப் போல
அவளும் சமைத்துக் கொண்டிருக்கக்கூடும்
அவளுக்கான ஒரு கவிதையை.
- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )