என்செய்வது?

cold_hole
முட்களை
முனைமழுக்குவதால்
காயமின்றி
தப்பிவிடும் ரோஜா என்றால்
பறித்தெறியும் காற்றை
என் செய்வது?

அபஸ்வர சங்கீதம்

வீட்டின் முற்றத்தில்
கிளைவிட்டு நிற்கும்
புங்கை மரக்கிளைகளில்
முருங்கை மரங்களில்
வந்தமரும் குருவிகளின்
சங்கீதம் குதூகலப்படுத்தும்.
இடை இடையே
இழவுக்கிளியின்
இடைவிடா ஆரோகணம்.
அந்திம கால மரங்களின்
இலையுதிர் கால
இலைகள் இரண்டு
என்னருகே
இளைப்பாறும் போது
எல்லாக்குருவிகளின்
சங்கீதமும் எனை வதைக்கும்.


ஒளி திருடுபோவதை

என் கஷ்டம் கண்டு
கழிவிரக்கம் கொண்டு
காட்சி தந்தாலும்
கற்பூர ஆராதனை மட்டும்
செய்ய மாட்டேன் கடவுளே. . .
காற்றால்
ஒளிதிருடுபோவதை
காலத்தாலும்
அனுமதியாதென் நெஞ்சு.

ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.