பிரபஞ்ச வெளியில்
தொலைந்த
எனது நாட்களின்
பதிவுகளைத் தேடி..
முகங்களற்ற மனிதர்களின்
வெளியில்.....
தெறித்து சிதறிய
தூசிகளாய்
படிந்து கிடக்கின்றன
அடையாளமற்று
எனது நாட்கள்..!
பகலெல்லாம் கழிந்த
மௌன பொழுதுகளில்
என்னின் சிறைவாசம்..
தேவையின் .. சுமைகளோடு...!
மாலையின் நெருக்கத்தில்..
மௌனம் கலைய ..
எதிர்பார்ப்புகள்
எச்சரிக்கை ஆகுகின்றன..!
இரவின் தனிமையில்
தேடவேண்டும்
என்னை.. எனதாகிபோகும்
பொழுதுகளை..!
- பொன்னியின் செல்வன்
அடையாளமற்ற நாட்கள்..!
- விவரங்கள்
- பொன்னியின் செல்வன்
- பிரிவு: கவிதைகள்
More articles by பொன்னியின் செல்வன்
- மணல் கொள்ளையும் தமிழக அரசியலும் (16 நவ 2010)
- உனக்கான வரவேற்பு...! (12 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.