செடி பார்க்கச்சொல்லி
‘சுவற்றில் பல்லிபாரெ’ன
பார்வை திருப்பி
மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து...
குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச்செல்லும்
தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.
எத்தனையோ மைல்கற்களுக்கப்பால்
செய்யும் அமைதியற்ற வேலைகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அந்த கேவல் சத்தம்.
- இளம்பிறை
தீப்பிடிக்கும் வழித்தடங்கள்
More articles by இளம்பிறை
- தன்காட்டில்... தன்கூட்டில்... (22 டிச 2020)
- அது வேறு மழைக்காலம் (06 ஆக 2020)
- கவிஞர் இளம்பிறை கவிதைகள் (29 மே 2020)
- ஆண்கள் எழுதியதெல்லாம் போலியானது (25 ஏப் 2010)
- குடைசாய்ந்த இரவு (23 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.