Worried manஅதீதத் தனிமையும்
மிகுந்த உற்சாகமும் கலந்த
அந்த சிருஷ்டி உலகத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டு அநேகநாட்களாகிவிட்டன

கையில் விளக்கோடும்
உள்ளம் நிறைய ஒளியோடும்
அவள் வந்தாள்
என் வானம் வெளிச்சமானது

கனிமரங்களும்
நிறைய காலடித்தடங்களும் கொண்ட
பரபரப்பான பாதைகள்
தினங்களை தின்றுகொண்டிருக்கின்றன

எங்காவது
சற்றே இளைப்பாறுகிற
நிசப்தவினாடிகளில் மட்டும்
பலவீனமாய் கேட்கிறது
என்னைத் தொலைத்துவிட்ட
என் கவிதைகளின் அழுகுரல்

- வீரமணி இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It