பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன்..
இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...
ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..
சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.