வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை

கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி

சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.