வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை

கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி

சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!

- அத்திவெட்டி ஜோதிபாரதி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
Pin It