ஊருக்குள்
கொள்ளை நோய்
பரவுவதாக தகவல்
வந்த மறுநாள்
அரசாங்க அலுவலர்கள்
மாநாடு போட்டார்கள்.
நம்மூர் தட்பவெப்பநிலையில்
கொள்ளை நோய் பரவாது.
எப்படியும் கட்டுப்படுத்திவிடுவோம்
என்றார்கள்.
கொள்ளை நோய்
கண்டு அஞ்சற்க.
மாஸ்க்கால் வாயை இறுகி
மூடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்
மக்களை.
யாரோ கேட்டார்கள்.
என்ன பதில்
இது வரை
இறந்துப்போன உயிர்களுக்கு?
மாஸ்க்கால் கண்களையும்
மூடிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
- என்.விநாயக முருகன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- விவரங்கள்
- என்.விநாயக முருகன்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post