காலையின் நிச்சலனக் குளத்தில்
கமல இதழ்களென
தழதழத்திருக்கிறது மனம்
 
நீளும் கமலத் தண்டினை
நிலமதிரப் பிடுங்குவதுபோல்
கைபேசி அலறல்
 
நொடி கலங்கி
சமையலறை அடுப்பந் தணலின்
நாவிற்கிரையாகிறது 
சலனத்திற்குப் பிய்ந்த
மன இதழ்.
 
- மேழி  வான்மதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.