உள்ளுக்குள் பூட்டிய
மனக்கதவினைத் திறக்க
வெளியிலிருந்து
எத்தனையோ சாவிகள்
முயன்று தோற்றுப்
பின்வாங்கின
சாவித்துவாரத்தின் வழி
வெளிச்சக் கதிர்
உள் நுழைகிறது
கதவைத் திறந்ததும்
வெளிச்சம் விரவி
முழுதாய் ஆக்கிரமிக்க
பின்வாசல் வழி
முக்காடிட்டு
வெளிறி வெளியேறியது
காரிருள்

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.