காலப்புரவியின் மீது
தாவியமர்ந்து
பயணம் மேற்கொள்ள
யத்தனிக்கிறேன்
நினைவுகளின்வழி
நழுவுகிறது பிடி
பின்னங்கால் உதைவலி
பிடறியில் தெறிக்கிறது
நினைவுச்சேறில்
உழப்பிக் கொண்டிருக்கும்
என்னைத் தவிர்த்துவிட்டு
காலப்புரவி
சிலிப்பிக் கொண்டு
முன்னேறிச் செல்கிறது

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.