அவனது கண்களின்
நரம்புகளுக்குள்
பறவையின் தீனி போல
உருண்டோடிக் கொண்டிருக்கின்றன
பெண்ணின் மார்பகங்கள்

அதைக் கொத்தித் தின்ன
காமத்தின் எச்சில் வழியும்
அவனுடைய சஞ்சல அலகு
அரிவாளாய் மின்னுகிறது

ஏனோ
அவன் ஞாபகத்தின்
வறண்ட நிலத்தில்
அறுந்து விழுகாமல்
அவன் அம்மாவின்
முலையில் தொங்குகிறது
தூக்கணாங் குருவிக் கூடாய்
அவனது சிசுப்பருவம்!

- செ.நாகநந்தினி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.