சலசலத்து ஓடும் நதியில்
மௌனமாய்
நீர் அருந்திவிட்டு
கடந்து போக எத்தனிக்கும்
பறவைக்கான கவிதையொன்றில்
மீன்கள் வருகின்றன
உதிர்ந்த பூக்கள் வருகின்றன
வேண்டாமென தூக்கியெறிந்த
உடைகள் வருகின்றன...
இறுதியாய் வேடன் வரும்போது
கவிதையைத் தூக்கியெறிந்து விட்டேன்...

- மு.முபாரக்

Pin It