நேசம் விழுங்கும் நெடுஞ்சாலை
நெக்குறுகிறது
முடிவெளியற்ற கருந்துளையில் ...

உன்மத்தம் தாங்கிய
பூங்காவின் கதவுகள்
அடைபடுகிறது
துருவேறிய அறுவை
சிகிச்சை கத்திக்குள்...

கீறல் விழுந்த
குறுந்தகடில்‌ ஒலிக்கும்
உறவின் பாடல்கள்
தஞ்சமடையும்
பாலை சப்பாத்தி இலை பழுத்தே கிடக்கிறது...

கதவிடுக்கில் சிக்கிய
அன்பின் விரல்கள்தான் அந்தோ பரிதாபம்.

- கார்த்திகா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.