வாழ்த்து அட்டைகளில்
நிறைந்துகொண்ட
அன்றைய தமிழ்ப்புத்தாண்டு
வண்ணங்களின் சுமையோடு
இன்றும் உலர்ந்துகொள்ளாத மீளிப்பருவமாய்
அகதாழில் கிறுக்கப்பட்ட நினைவுகள்
அலமாரி அடுக்குகளில் அடைந்துபோக
பலபேரால் கடத்தப்பட்ட
ஒரு குறுந்தகவலில்
தன்னை புதிப்பித்துக்கொண்டு
கைபேசியில் மீளுருகிறது
இன்றைய தமிழ் புத்தாண்டு

- சன்மது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.