வாழ்வின் பெரும்பகுதியும்
அதிரதன் மகனாய் வாழ்ந்ததன் அவஸ்தை
அங்க தேசத்தின் அரசனே அறிவான்.
ஆற்றல் இருந்தும்,
ஆர்வம் இருந்தும்,
அங்கீகாரம் கிடைக்காதது
அவனுக்கு எப்போதும் தொண்டை முள் தான்.
அள்ளித் தந்தே
அகக்குறை மாற்றினான்.
பிறருக்கீந்தே
பெரும் வலி போக்கினான்.
எல்லாம் இருந்தும்,
ஏதுமின்றி வாழ்ந்தான்.
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுத்து மறைந்தான்.
கர்ணன்களின் வலி
கர்ணன்களே அறிவர்...

- பாலமுருகன் வரதராஜன்

Pin It