ஆயிரம் கைகளிருந்தும்
தேர்மீது ஏறி வரும்
அம்மன் பரவசமடைகிறாள்
கைக்கு எட்டாத பலூன்களைப் பார்த்து.
வடம் பிடிக்காமலே இழுத்துச் செல்கிறான்
பலூன்காரன் திருவிழாவைப்
பரவசமாய்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.