நிறைதேரல் கூடென
கனக்கிறது உள்ளம்
காட்டாத அன்பால்

பால் கட்டிய மடியாய்
கடுக்கிறது நா
மொழியாத சொற்களால்

இளங்கன்றை இழுக்கும்
வடமென தெறிக்கின்றன இமைகள்
காணத் துடிக்கும் விழிகளால்

பேசப்போகிறாயா அல்லது
தொடங்கிய நானே
முடிக்கவா என பொங்குகிறது
தாங்கவியலா தன்முனைப்பு ...

- கா.சிவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.