வைகறையின் முதற்பனித்துளியிலும்
படிந்துள்ளது
அமிலங்களின் வீரியம்

கறக்கின்றபோதே
உறைந்துள்ளது
ஆவின்பாலில்
வீரிய ஊக்கியின் எச்சம்

வளியில் ஊடாடிய கறைகளில்
களங்கமாகியே
மேனியைத் தொடுகிறது
புலரியின் முதற்கதிர்

ஒவ்வொரு குழவியும்
பிறக்கின்றன
முற்பிறப்பு விழைவின்
எஞ்சிய நஞ்சுடனேயே

பரிசுத்தத்திற்கான
ஒப்புமை ஏதுமில்லாதபோது ,
எப்படி உணர்த்துவேன் ...
என் தெள்ளிய காதலை அவளுக்கு

- கா.சிவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.