விந்தைமிகு
பூமிச்சிறைக்குள்
வனத்திற்குள்
அடைக்கப்பட்டிருக்கிறோம்
மேலும் தப்பிச்செல்லா வண்ணம்
நினைவுகளும் ஆயுதங்களும்
அபகரிக்கப்பட்டுள்ளன
விரைந்து
பூமியின் விளிம்புப் பகுதிக்குச் சென்று
வெளியேறுவதற்கான
வழியைத் தேட வேண்டும்
அதுவே விடுதலை
அல்லது
வேறு சிறைக்குள் அடைபடுவதற்கான வழி!

- இரா.இராகுலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.