தீங்கென்று தெரிந்தும்
தொடர்ந்து சேற்றை
பூசி கொள்கின்றனர்
ஒன்று கூடி..
சேற்றைத் தவிர்த்து
நிற்கும் ஒருவனிடம்
ஊரோடு ஒத்து வாழ
அறிவுறுத்தப்படுகிறது..
சேற்றில் புரளும்
சீமான்கள்
குடும்பத்தோடு
களித்திருக்க
சுத்தத்தை
சுவாசிப்பவன்
சத்தமின்றி
வெளியேறுகிறான்
சேற்றில் மிதக்கும்
உலகத்திலிருந்து...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.