தற்செயல் நிகழ்வுகள்
எப்பொழுதும்
அழகானவை!

சட்டென
உருளும் ஒற்றைத்துளி
கண்ணீர் போல....

வெக்கை சூழ்
பொழுதொன்றில்
முகம் நிறை
வியர்வைத்துளி கண்டு
உப்பென ஊதும்
உன் மூச்சுக்காற்றைப் போல....

உடையுந்தருணமொன்றில்
உடன் பற்றிக்கொள்ளும்
உன் கைகளைப்போல....

எதிர்பாரா நேரத்தில்
நெற்றி முடி ஒதுக்கி
நீ தரும் முத்தம் போல...

கனத்த மௌனத்தை
உடைத்தெறிகிற
முதல் வார்த்தை போல....

தற்செயல்கள்
எப்பொழுதும் அழகானவை!
நம் தற்செயலான
சந்திப்பைப் போல...

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.