பிரியங்களை நிரப்பி
குத்தீட்டியென
பாயும் பார்வையைத் தாங்காது கவிழ்ந்து
கொண்டன இமைகள்
உதிர்ந்து கொண்டிருக்கிற
மாலைப் பொழுதில்
தூரத்தில் பொழியும் மழையைச்
சுமந்து வரும் வளியின் ஈரம்
தொட்டுப் போகும் நொடிகளில்
வரைவின் நீட்டிப்பை
முறித்துக் கொண்ட நாக்குகள்
தழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து
நகைத்து முகந்திருப்பிய
கனகாம்பரப் பூ
வெட்கத்தில் சிவந்திருந்தது

- சிவ விஜயபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.