rainbow in forest

வண்ணப் புடவையாக வானவில்
உடுத்திக்கொண்டாள்
வனதேவதை !

***

ஆழ்துளைக் கிணற்றில்
நீச்சலடிக்கிறது
நிலா !

***

அழுது முடிப்பதற்குள்
சமாதானமடைந்து விட்டேன்
அம்மாவின் தாலாட்டு ...!

***

மகுடம் சூட்டிய
பனி மழை
உருகிவழியும் ஆறு

***

தட்டிக்கொடுத்த நெற் கதிர்கள்
வளருவதே இல்லை
விவசாயி !

***

பிச்சைக்காரன் தட்டில்
நிரம்பிவழியுது
பாவமூட்டை !

***

குளத்தில் நிலா
தூண்டில் போடுகிறது
கடிகார முள் !

- ஹிஷாலி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.